அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமையே இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4 ,000 முதல் 5, 000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் ,ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துவேலுக்கு ஆபரேஷன் முடிந்தது.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் Cineulagam