அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமையே இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4 ,000 முதல் 5, 000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் ,ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam