அதிகரிக்கும் துரித உணவு கலாச்சாரமும் தொற்றாத நோய்களும்: சுகாதார அமைச்சு வழங்கியுள்ள எச்சரிக்கை
அதிகரிக்கும் துரித உணவு கலாச்சாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் இன்று (10.01.2024) நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
நாட்டில் அதிகரித்துள்ள துரித உணவு கலாச்சாரத்தால் மக்கள் எண்ணெய், சீனி மற்றும் உப்பு அதிகளவில் அடங்கிய உணவுகளை உட்கொள்கிறார்கள்.
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இதன்மூலம், நாட்டு மக்களிடம் நீரிழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்ந்து, குறித்த தொற்றாத நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 18 மணி நேரம் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
