இருநாட்டு தலைவர்களை சந்திக்கும் ரிஷி சுனக்!வெளியான காரணம்
நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் ரிஷி சுனக் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேஸும் கலந்து கொள்கிறார். ஜோ பைடனுடன் இருவரும் இணைந்து நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குதல்
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான Aukus ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது குறித்தே இவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக பேசிய ரிஷி சுனக்,“கொந்தளிப்பான காலங்களில் பிரித்தானியாவின் உலகளாவிய கூட்டணிகள் நமது வலிமை மற்றும் பாதுகாப்பிற்கான மிகப்பெரிய ஆதாரமாக உள்ளன.
Aukus அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தின் அடுத்த கட்டத் திட்டத்தைத் தொடங்க நான் இன்று அமெரிக்காவுக்கு செல்கிறேன். இது நமது நெருங்கிய நட்பு நாடுகளுடன் பிணைப்பு மற்றும் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நன்மைகளை உள்நாட்டில் வழங்குகிறது.
அறிக்கை தகவல்
2023 அம் ஆண்டின் ஒருங்கிணைந்த மதிப்பாய்வு புதுப்பிப்பை நாளை தொடங்கும்போது, இது எதிர்காலத்தை நாங்கள் வழங்க விரும்புகிறோம் - இது பாதுகாப்பான, செழிப்பான மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் தோளோடு தோள் நிற்கும் பிரித்தானியா ஆகும்.”என தெரிவித்துள்ளார்.
2040களில் சுமார் ஐந்து அமெரிக்க வெர்ஜீனியா படகுகள் சேவையில் ஈடுபடும் வரை பிரித்தானிய Astute-class நீர்மூழ்கிக் கப்பலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை அவுஸ்திரேலியா தெரிவு செய்யலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
