ஜோசப் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்க: அரசிடம் ரிஷாத் வலியுறுத்து!
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் கருத்து
அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கைதை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில்,“ஜனநாயக அடக்கு முறைகளில் இருந்து விடுபடுவதன் ஊடாக மட்டுமே நாட்டின் இன்றைய அவல நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக விழுமியங்கள்

ஜனநாயக விழுமியங்களை பேணுவதன் மூலமே சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அநியாயமாக கைதுசெய்யப்பட்ட ஜோசப்
ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும்”என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam