சிறுமி ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் - ரிஷாத்தின் மனைவி மற்றும் மாமனாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனாரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.