ரிஷாத் வீட்டிற்கு மண்ணெண்ணெய் கொண்டு வந்தது யார்? முன்னுக்குப்பின் முரணான தகவலை வழங்கும் வீட்டார்
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்கள் காரணமாக மரணமான டயகம சிறுமி ஹிஷாலினிக்கு தீப்பற்றக் காரணம் எவரேனும் மண்ணெண்ணெய் ஊற்றியிருக்கலாமென புலனாய்வுக்குழுவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ரிஷாத் வீட்டுக்கு மண்ணெண்ணெய் கொண்டு வந்த நபரை முதலில் அடையாளம் காண விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நபர் அடையாளம் காணப்பட்டால் மண்ணெண்ணெய் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதற்கான காரணத்தை அறிந்தால் விசாரணைக்கும் மிகவும் உதவியாக இருக்குமென புலனாய்வு விசாரணை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,