ரிஷாத் வீட்டில் பணியில் இருந்த சிறுமி உயிரிழப்பு - சட்டரீதியான தீர்வினை கோரியுள்ள ஜீவன்
முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சட்டரீதியான தீர்வினை பெற்றுத்தருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டயகம 3ஆம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த 3ஆம் திகதி தீக்காயங்களுக்கு இலக்காகிய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாகவும், கல்வி கற்கும் வயதில் சிறுமியை வேலைக்கு அமர்த்தியமை தொடர்பாகவும் விரிவான விசாரனைகளை மேற்கொண்டு சட்டரீதியான தீர்வினை பெற்றுத் தருமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam