பெற்றோல் விலையேற்றத்தால் மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலை : முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை
பெற்றோல் விலையேற்றத்தால் மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோல் ஒரு லீற்றரின் விலை இன்று காலை முதல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது முச்சக்கர வண்டி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக மாற்று தொழிலுக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக மலையக பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி தொழிலில் ஈடுபடும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முச்சக்கர வண்டி சாரதிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் இன்று ஆயிர கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக முச்சக்கர வண்டி சாரதிகளாக பணிபுரிகின்றனர்.
இவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முச்சக்கர வண்டி சாரதி தொழிலிலேயே தங்கியுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்றியதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ள நிலையில், தற்போது பெற்றோல் விலையும் பல தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்றும் கூட பெற்றோலின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த தொழிலை பொறுத்த வரையில் பெரும்பாலும் தோட்டத்தொழிலாளர்களை மையமாகக் கொண்டே காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களின் பொருளாதாரமும் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அதனால் பெற்றோலின் உயர்வுக்கு ஏற்ப அவர்களிடம் கூலியை வாங்க முடியாத நிலையே உள்ளன. அவ்வாறு ஆட்டோவுக்கான கட்டணம் அதிகரித்தாலும் சவாரியும் குறைந்துவிடுகின்றன. மேலதிகமாக பணம் கேட்டால் சவாரி செய்பவர்கள் வர மறுக்கின்றனர்.
இதனால் எங்களுக்கு மாற்று தொழிலொன்றை தேடிச்செல்லவேண்டிய நிலையே உருவாகியிருப்பதாக முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
