மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
"ஒவ்வொருவரும் தமது உயிரிழந்த அன்புக்குரிய உறவுகளை அமைதியாக நினைவுகூருவதற்கு முழு உரிமை உள்ளது. அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் நினைவு நாள்
நவம்பர் 27ஆம் திகதி நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கில் பகிரங்கமாக ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்கு உங்கள் அரசு அனுமதி வழங்கியிருக்கின்றதா?என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இலங்கை ஜனநாயக நாடு. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது.
ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை அமைதியாக நினைவேந்த முழு உரிமை உண்டு.
இதைவிட வேறு எந்தக் கேள்வியும் தற்போதைய நிலைமையில் அவசியமற்றது" என்று தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri