இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு.. விலை அதிகரிக்கும் சாத்தியம்
சந்தையில் சம்பா, கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகள் கிடைக்காததால் நுகர்வோர் கடுமையான சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
விலை அதிகரிக்கலாம்..
சிறு அரிசி ஆலைகளினால் சந்தைக்கு கிடைக்கப்பெறும் அரிசியின் இருப்பு தீர்ந்துவிட்டதால் இவ்வாறான பற்றக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாரியளவிலான அரிசி ஆலைகளை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் இருந்து கடந்த நாட்களில் சந்தைக்கு குறைந்தளவிலான அரிசியே கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிறிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தைக்கு வெளியிடும் அரிசி இருப்பு தீர்ந்ததால், பெரிய அளவிலான அரிசி வியாபாரிகள் சந்தையில் அரிசி விலையை அதிகரிக்க தயாராகி வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.