அரிசி இறக்குமதி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரிசி இறக்குமதி செய்யப்படும் போது பாரியளவில் மோசடி இடம்பெறக்கூடிய சாத்தியம் உண்டு என தொழிற்சங்க ஒன்றியத்தின் கூட்டமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரிசி இறக்குமதி
இந்தியாவிலிருந்து நாடு அரிசி இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக மோசடியான முறையில் இலாபமீட்ட சிலர் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஸ்வர்ண நாடு அரிசி ஒரு கிலோ கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வர 110 ரூபா செலவாகின்றது என ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் விளக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விற்பனை
70000 கிலோ கிராம் அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் அதன் ஊடாக 770 கோடி ரூபா தரகுப் பணம் கிடைக்கப் பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த மோசடியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் தரப்பினர் யார் என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri