பிரான்சில் தொடங்கிய பழிவாங்கும் அரசியல்: வலதுசாரிக் கட்சித் தலைவர் மீது பொலிஸ் விசாரணை
பிரான்ஸ்(France) நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த நிலையில் அக்கட்சிக்கு மூன்றாம் நிலையே கிடைத்தது.
இந்நிலையில், வலதுசாரிக் கட்சியின் தலைவரான மரைன் லு பென்னை (Marine Le Pen) சிறைக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை
அவர் மீதான பழைய வழக்கொன்றைக் கிளறி, பொலிஸார் வலதுசாரிக் கட்சி மீதும், அக்கட்சியின் தலைவரான மரைன் லு பென் மீதும் மோசடி வழக்கு விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு, மோசடி செய்து ஜனாதிபதியாக முயற்சி செய்ததாக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந் நிலையில் தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி செலவுக்காக, National Rally கட்சி, மக்கள் வரிப்பணத்தை திருடியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
குறித்த வழக்கு, வரும் செப்டம்பர் மாதம் பாரீஸில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரைன் லு பென் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதுடன், அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam