வவுனியாவில் மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் மடக்கிப்பிடிப்பு
முறையான வழி அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் இன்றைய தினம் வவுனியா வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, ஏ9 வீதியின் ஊடாக நகரப்பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் வவுனியா வனத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது 4 டிப்பர் வாகனங்கள் முறையான வழி அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த 4 டிப்பர் வாகனங்களும் வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள.
அத்துடன் டிப்பர் வாகன சாரதிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.