தம்புள்ளையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி
தம்புள்ளை - சிசிரவத்தை பகுதியில் ஓய்வு பெற்ற தபால் அதிபர் ஒருவர் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளதுடன் தம்புள்ளை சிசிரவத்தை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
பொலிஸார் தகவல்
தம்புள்ளை, அத்துபாராய பகுதியில் உயிரிழந்து நபருடைய நண்பரின் தோட்டத்தில் உள்ள மரமொன்றை வெட்டுவதற்காக பலர் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போது, ஐம்பது அடிக்கு மேல் உயரமுள்ள குறித்த மரத்தை கயிற்றை கட்டி கீழே வீழ்த்த முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், மரத்தின் கீழே நின்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் மீது மரம் வீழ்ந்துள்ளது.” என தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர், பாதிப்புக்கள்ளானவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |