மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தினால் மக்கள் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளியை பேணுதல், கைகளை கழுவிக் கொள்ளல் மற்றும் கை சுத்திகரிப்பான் பயன்படுத்தல் போன்ற பழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இந்த நாட்களில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் காரணத்தினால் அந்த துறையுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுவோர் சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியது அவசியமானது என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri
