இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்:நள்ளிரவை தாண்டியதால் அமைதியின்மை
திருகோணமலை - முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று (24) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் என்ற அடிப்படையில் எரிப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது.
இதற்கமைய இன்று (25) நள்ளிரவு 12.00 மணியை தாண்டியதால் திங்கட்கிழமைக்கான தகட்டையுடைய மோட்டார் சைக்கிளை திடீரென்று எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் ஒன்று சேர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தின் புதிய முறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் |
பொலிஸாரின் நடவடிக்கை
இந்த அமைதியின்மையால் திருகோணமலை- கண்டி பிரதான வீதி ஒரு சில நிமிடங்கள் தடைப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கமைய நள்ளிரவு 12 மணியை தாண்டியதால் தங்களுக்கும் எரிபொருள் பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனாலும் மக்கள் எரிபொருளை
பெறுவதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் எரிபொருளின்றி
ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 8 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
