பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு புதிய பொறுப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவு என்பன தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை காலமும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது.
பொலிஸ் திணைக்களத்தின் வேறு எந்தவொரு பிரிவுடனும் குற்றப்புலனாய்வுப் பிரிவு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கான சூழல் இதுவரை ஏற்படவும் இல்லை.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை
இந்நிலையிலேயே இவ்வாறு இரு பிரிவுகளும் பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், இனிவரும் காலங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இயங்க வேண்டியேற்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
