மனிதாபிமான ரீதியில் செயற்படும்போது சட்ட விதிமுறைகளுக்கும் மதிப்பளியுங்கள் - யாழ். மக்களிடம் வேண்டுகோள்

Covid-19 Police Jaffna People
By Kanamirtha Sep 10, 2021 10:21 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

"நாட்டின் தற்போதைய நெருக்கடி மிக்க சூழலில் மனிதாபிமானச் செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அதேவேளை, கோவிட் வைரஸ் தொற்றுப் பரவலையும் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம்." என யாழ்ப்பாணம் மாவட்ட மக்களிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகக் குரல் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததையடுத்து அவரது மரணவீட்டுக்கு அதிகளவானோர் சென்றிருந்தனர். குறித்த நபரின் திடீர் மரணம் உளவியல் ரீதியிலான தாக்கத்தை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்தவராக அவர் அந்தப் பிரதேசத்தில் மதிக்கப்படுகின்றார். பிரதேச மக்களுடன் நல்லுறவைப் பேணி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவரது மரண வீட்டுக்கு அதிகளவானோர் சென்றுள்ளனர் என்பது பொலிஸ் தரப்பு கருத்தாக உள்ளது. குறித்த நபருக்கு நாமும் கௌரவமளிக்க வேண்டும்.

அதேபோன்று மற்றுமொரு சம்பவம் பதிவாகியிருந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்கச் சூழலைக் கருத்தில்கொண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது உண்மையில் மனிதாபிமான ரீதியான செயற்பாடு. ஏனெனில், சமூகசேவகர் என்ற ரீதியில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் உதவுவதற்காக முன்னின்று அவர் செயற்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நாம் கௌரவமளிக்க வேண்டும். இவ்விரு சந்தர்ப்பங்களுக்கும் முதலில் நாம் மதிப்பளிக்க வேண்டும்.

எனினும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம் உள்ளது. தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மிகவும் பயங்கரமான நோய்த்தொற்று மக்கள் மத்தியில் பரவி வருகின்றது. நோய்த்தொற்றுக் காவிகளாக மக்களே உள்ளனர்.

எனவே, இந்தத் தொற்றானது ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்குப் பரவக்கூடும். அதேபோன்று ஒருவருக்குத் தொற்றுப் பரவினால் அவரது குடும்பத்தினர், அயலவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்பை எதிர்கொள்வர்.

எனவே, சமூகத்தில் சிறந்த முறையில் வாழ்ந்து மரணித்த நபருக்கு நாம் கௌரவமளிக்கின்றோம். எனினும், அந்த நபரின் மரணவீட்டில் பங்கேற்பதால் தொற்றுப் பரவல் அதிகரிப்பதுடன் மற்றுமொருவரின் மரணத்துக்கும் அது காரணமாகின்றது.

எனவே, இவ்விடயமானது உயிரிழந்த நபரை அவமதிப்பதாக அமைந்துவிடும். அதேபோன்று நிதி பகிர்ந்தளிக்கும் விடயத்தை எடுத்துக்கொண்டால் நிதி பகிர்ந்தளிக்கும் நபர் மனிதாபிமான ரீதியில் நடந்துகொண்டாலும் அந்த இடத்தில் நோய்த் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வந்தவரினூடாகப் பணத்தைப் பெறுவதற்கு வராத ஒருவர் பாதிக்கப்படக்கூடும்.

இவ்வாறான மனிதாபிமானச் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது பொலிஸார் அவ்விடத்துக்கு வந்து தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை நடைமுறைப்படுத்த நேர்ந்தால் அது எமக்கும் வருத்தமளிக்கின்றது. எனினும், சட்ட ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது எமது பொறுப்பு.

எனவே, சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாம் மக்களைக் கோருகின்றோம். கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறே நாம் பொதுமக்களைக் கோருகின்றோம்" என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US