மேய்ச்சல் தரைப் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் - எழுந்துள்ள கண்டனம்
மேய்ச்சல் தரைப் பிரச்சனையை வைத்து அரசியலுக்கு வந்தவர் அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாக உலா வந்து கொண்டிருக்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மேதின நிகழ்வு நேற்று(01.05.2026) மாலை மட்டக்களப்பு மகிழடித்தீவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேய்ச்சல் தரைப் பிரச்சனை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலையில் 1,50,000 மெட்ரிக் டொன் கடலுணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அவ்வாறிருந்தும் மட்டக்களப்பில் பசியும் பட்டினியுமாக மக்கள் அலைகின்றார்கள்.

மேலும், விவசாயிகளினால் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களுக்கான விலைகளை யார் யாரோ தீர்மானிக்கின்றார்.
இதனையடுத்து, மேய்ச்சல் தரைப் பிரச்சனை தொடர்பான போராட்டம் இன்றும் சித்தாண்டிச் சந்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த மேய்ச்சல் தரைப் பிரச்சனையை வைத்து அரசியலுக்கு வந்தவர் அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உலா வந்துகொண்டிருக்கின்றார்.

முதல் முதலாக இந்த மேய்ச்சல் தரைகளுக்காக 24,500 ஹெக்டேர்களை ஒதுக்க வேண்டும் என்று சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்மொழிந்து மாகாண சபையால் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் அவர்கள் இன்னும் அதனை நடைமுறைபடுத்தவில்லை.
இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்புக் கொள்கையினை அமுல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம். ஏனென்றால் இலங்கையில் தேசிய ரீதியாக கால்நடை வளர்க்கின்ற செயற்திட்டம் வேறு, தேசியக் கொள்கை வேறு என்பதனாலாகும்.

மேலும், இந்த பிரதேச மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள்,பொது அமைப்புகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan