பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும், அவரை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.