கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைக்க தீர்மானம்
யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று (02) காலை 10மணியளவில் சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பின் வீதிப் புனரமைப்புக்கான அளவுத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புனரமைப்புக்கான வேலைத்திட்டம்
பிரதானமாக கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில் இருந்து ரீச்சா வரையுள்ள வீதிக்கான புனரமைப்புக்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கொடுக்குளாய் கிராம அபிவிருத்தி சங்கம், உடுத்துறை கிராம அபிவிருத்தி சங்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
