ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை மத்திய கிழக்கு நாடொன்றிற்கு விரிவுபடுத்த தீர்மானம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை நடத்துவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும், எரிபொருளை உற்பத்தி செய்யும் நாட்டின் நிறுவனத்திற்கு வழங்கினால், எளிதாக விமானத்தை இயக்க முடியும் எனவும் அரசாங்கம் கருதுகின்றது.
31,000 கோடி ரூபா கடனில் செயற்படும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
மேலும், குறித்த நிறுவனம் தற்போது 31,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்புடன் செயற்பட்டு வருவதாகவும், இதனை மறுசீரமைக்க அரசு உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டுமெனவும் இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.