ரணிலை பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்கு மாவட்ட மட்டங்களில் தீர்மானம்: வெளியாகியுள்ள தகவல்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தேசிய பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக்குழு மற்றும் செயற்குழு என்பனவும் அண்மையில் தீர்மானித்துள்ளன.
நிறைவேற்றியுள்ள தீர்மானம்
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் அரசியல் கோட்டையான அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
