மக்களுக்கு உதவ முடியாவிட்டால் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலகுவேன்! ரஜீவன் எம்.பி ஆவேசம்
மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான உதவி
அந்த பதிவில் மேலும்,
நாடாளுமன்ற உறுப்பினராக எனக்குள்ள அதிகாரத்தையும் தாண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச்சொல்லி பல அரச அதிகாரிகளை கெஞ்சிக் கேட்டேன். பலர் உதவினார்கள். சிலர் உதவவே இல்லை. அதனை மன்னிக்க முடியாது. அப்படியானவர்கள் தங்கள் பதவியை உறுதிப்படுத்த பாடுபட்டார்களே தவிர மக்களுக்கு உதவவில்லை. உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை வழங்குவேன்.

மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகின்றேன் எனக்கு உதவ ஆயிரம் வழிகள் உண்டு. அதே போன்று அதிகாரம் உள்ள யாரும் மக்களுக்கு நல்லது செய்ய பின் நிற்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan