திருகோணமலையில் மீள் குடியேறும் மக்கள்: அதிகாரிகளின் அசமந்த போக்கு (Photos)
திருகோணமலை பண்குளம் 4ம் கண்டத்தில் கடந்த 1983 ம் ஆண்டுக்கு முன்னர் 320 குடும்பங்களுக்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.
1983 மற்றும் 1990 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு வாழ்ந்து வந்த மக்கள் சிங்களவர்களால் அடித்து துரத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில் அப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் திருகோணமலை நகரப்பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர்.
மீண்டும் இவர்கள் தமது வாழ்விடங்களுக்கு திரும்பி வந்து வாழ்வதற்கான உதவிகளை அரச அதிகாரிகளை அணுகி கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பின் முக்கிய பகுதியை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்க தீவிர நடவடிக்கை (Photos) |
மக்களின் கோரிக்கை
இந்நிலையில் அவர்களுக்கு தேவையான எவ்விதமான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க மறுக்கின்றனர்.
இருந்த போதிலும் தமது தற்துணிவின்பாள் தாங்கள் வசித்து வந்த மற்றும் தமது மூதாதையோர் வாழ்ந்த பூமியை யாருக்கும் விட்டுக் கொடுக்காது அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது சொந்த நிலத்தில் 15 குடும்பங்கள் முதல்கட்டமாக குடியேறியுள்ளனர்.
இவர்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் மற்றும் அடிப்படைத்தேவைகள் முக்கிய தேவையாக காணப்படுகின்றது எனவே தமக்கான உதவிகளையும் தங்கள் நிலங்களில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
