மீண்டும் தவணையிடப்பட்ட முல்லைத்தீவு தியோநகர் வழக்கு

Mullaitivu Sri Lanka
By Shan Jul 25, 2024 07:44 PM GMT
Report

தியோகுநகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம்(25) நீதவான் நீதிமன்றில் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - தியோகுநகர்ப் பகுதியில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி கரைதுறைப்பற்றுப் பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை, அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்ந பொதுமக்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவளைப்பு

திருகோணமலையில் தனியார் வைத்தியசாலைகள் சுற்றிவளைப்பு

வழக்கு விசாரணை

இந்நிலையில், இதுதொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஜுன் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரங்களுடன் தொடர்புபட்டுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், தியோகுநகர் கிராமமக்கள், அவலோன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக இம்மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மீண்டும் தவணையிடப்பட்ட முல்லைத்தீவு தியோநகர் வழக்கு | Rescheduled Mullaitivu Deonagar Case

இதனையடுத்து நேற்றையதினம் (25.07.2024) குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டதரணிகள் வாதாடி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05க்கு மீண்டும் வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

மீண்டும் தவணையிடப்பட்ட முல்லைத்தீவு தியோநகர் வழக்கு | Rescheduled Mullaitivu Deonagar Case

1983 ஆம் ஆண்டுக்கு முற்பட்டே தியோநகர் கிராமம் உருவாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்ற நிலையில் கடற்றொழில் அவர்களின் வாழ்வாதாரமாக  காணப்படுகின்றது.

இக்கிராமம் உருவாக்கப்பட்டது தொடக்கம் கடலுக்கு செல்லும் பாதை அக்கிராமம் ஊடாகவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளதுடன் திடீரென தனியார் நிறுவனம்  தங்களுடைய காணி என உரிமை கோரி மக்கள் குறித்த பாதையூடாக கடற்கரைக்கு செல்லாதவாறு பாதையை மறித்து வைத்ததன் பின்னரே மக்கள் போராடி வீதியை அகற்றியுள்ளனர்.

அதனையடுத்து, குறித்த கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் விரைந்து அது பிரதேசசபைக்கு சொந்தமான வீதி என கடிதம் வழங்கியுள்ளனர்.


எனினும்,  தனியார் நிறுவனத்தினர் மக்கள் மீதும் குறித்த கிராம காணி தமக்கானது என கூறி முறைப்பாடு செய்ததோடு வழக்கினையும் பதிவுசெய்துள்ளனர்.

அதன்படி, இவ்வழக்கானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , சமூகசேவகர் பீற்றர் இளஞ்செழியன், உட்பட கிராமமக்கள் உட்பட 13 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை கைவிட்டுமாறு ஜீவன் அறிவிப்பு

பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டங்களை கைவிட்டுமாறு ஜீவன் அறிவிப்பு

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குழுவினர் கைது

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குழுவினர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US