தொடரும் நெருக்கடி! - நாட்டை முழுமையாக மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை அடுத்து எதிர்வரும் சில தினங்களுக்குள் நாட்டை மூடுமாறு அரசாங்கத்திடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளாக கூறப்படுகின்றது.
அத்துடன் தொடர் மின் வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிடடுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



