பெரும் அழிவை சந்திக்க நேரிடும்: ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவசர கோரிக்கை
இரசாயன பசளைகளுக்கு தடைவிதிக்க எடுத்த தீர்மானத்தை சில காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் (Gotabaya Rajapaksa) மிகவும் தாழ்மையுடன் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், சரியான முறைகளை உருவாக்கியதும் இயற்கை பசளை தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.
குருணாகலில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால், பெரிய அழிவு ஏற்படும் எனவும் தனக்கும் வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பசளை தொடர்பான பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்காது போல் , அது ஜனாதிபதிக்கு மாத்திரல்லாது அரசாங்கத்திற்கும் பிரச்சினையாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓர் ஆணுடன் இருந்தால் மட்டுமே லண்டனில் பாதுகாப்பு! அதனால்தான் வெளியேறினேன்..பிரபல நடிகை News Lankasri
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri