இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம்

Jaffna Sri Lanka Final War Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 15, 2023 05:54 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் தினங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்றையதினம்(15.10.2023) அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இறுதி முடிவொன்றை எடுத்துள்ளோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இறுதி முடிவொன்றை எடுத்துள்ளோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

1987  படுகொலை

“தாங்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலிவை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்களும் கேட்டு இரசித்து மகிழ்கிறோம்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

அந்த வகையில் உங்களுக்கு ஏராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். பாரிய இனவழிப்பினை தமிழினம் சந்தித்ததனை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களினை நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

இந்தநிலையில், தங்களால் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளாகிய இதே தினங்களில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட நோயாளர்கள் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தவர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

தமிழின போராட்டத்தின் நியாயங்கள்

அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடா வருடம் நினைவுகூரப்பட்டு வருகிறது.

இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம்.

இதனை மடைமாற்றி இந்நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள், தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

இந்நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கலந்து கொள்வதானது, அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் பேரினவாதத்தால் இன்றும் தடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும்.

மேற்படி நினைவேந்தல்களூடாக தமிழினம் அடுத்த சந்ததிக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயற்பாடாகவும் அமையும்.

தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இறந்தவர்களை நினைவேந்தும் உரிமையை சர்வதேச சட்டங்களும் இலங்கைச் சட்டங்களும் அனுமதித்துள்ள போதும் , படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு சட்டவிரோதமாக தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தரப்புக்கள் , நினைவேந்தல்களுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாதபோது, இந்நாட்களைத் தெரிவு செய்து களியாட்ட தினங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

இத்தகைய முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ்மக்களின் வலிகளையும், இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் வேதனைகளையும் உணர்ந்துகொண்டு, மதிப்பளித்து குறித்த திகதிகளை மாற்றி பொருத்தமான வேறொரு திகதியில் நிகழ்வை ஒழுங்குசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

தமிழ்க் கட்சிகள் இணைந்து மீண்டும் மோடிக்குக் கடிதம்! சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்க் கட்சிகள் இணைந்து மீண்டும் மோடிக்குக் கடிதம்! சி.வி.விக்னேஸ்வரன்

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US