இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம்

Jaffna Sri Lanka Final War Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 15, 2023 05:54 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் தினங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்றையதினம்(15.10.2023) அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இறுதி முடிவொன்றை எடுத்துள்ளோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இறுதி முடிவொன்றை எடுத்துள்ளோம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு

1987  படுகொலை

“தாங்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலிவை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்களும் கேட்டு இரசித்து மகிழ்கிறோம்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

அந்த வகையில் உங்களுக்கு ஏராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள். பாரிய இனவழிப்பினை தமிழினம் சந்தித்ததனை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களினை நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

இந்தநிலையில், தங்களால் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளாகிய இதே தினங்களில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட நோயாளர்கள் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தவர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

தமிழின போராட்டத்தின் நியாயங்கள்

அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடா வருடம் நினைவுகூரப்பட்டு வருகிறது.

இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம்.

இதனை மடைமாற்றி இந்நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள், தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

இந்நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கலந்து கொள்வதானது, அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் பேரினவாதத்தால் இன்றும் தடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும்.

மேற்படி நினைவேந்தல்களூடாக தமிழினம் அடுத்த சந்ததிக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயற்பாடாகவும் அமையும்.

தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இறந்தவர்களை நினைவேந்தும் உரிமையை சர்வதேச சட்டங்களும் இலங்கைச் சட்டங்களும் அனுமதித்துள்ள போதும் , படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு சட்டவிரோதமாக தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தரப்புக்கள் , நினைவேந்தல்களுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாதபோது, இந்நாட்களைத் தெரிவு செய்து களியாட்ட தினங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இசையமைப்பாளர் சந்தோஷிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் அவசர கடிதம் | Request To Music Composer Santhosh Jaffna

இத்தகைய முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ்மக்களின் வலிகளையும், இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் வேதனைகளையும் உணர்ந்துகொண்டு, மதிப்பளித்து குறித்த திகதிகளை மாற்றி பொருத்தமான வேறொரு திகதியில் நிகழ்வை ஒழுங்குசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

தமிழ்க் கட்சிகள் இணைந்து மீண்டும் மோடிக்குக் கடிதம்! சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ்க் கட்சிகள் இணைந்து மீண்டும் மோடிக்குக் கடிதம்! சி.வி.விக்னேஸ்வரன்

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US