யாழில் கடலுக்கு சென்று வீடு திரும்பாத மகன்: கண்ணீருடன் தாயார் முன்வைத்த கோரிக்கை (Video)
கடற்றொழிலுக்கென சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரை கண்டுபிடித்துத் தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உதவுமாறும் காணாமல் போனவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 04.08.2023 அன்று கடலுக்கென சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என்றும் அவரை கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த நிலையில், கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை நாகர்கோவில் பகுதியில் மடக்கிப் பிடித்த அப்பகுதியினர் கடத்தல் தொடர்பில் ஒப்புக்கொண்ட நிலையில், அவரை பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தெரிவித்துள்ள தாயார் மேலும் அவருடன் சென்ற ஒருவர் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைதாகி இருப்பதுவும் தெரிவித்துள்ளார்.
தனது மகன் வீடு திரும்பாத நிலையில், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுள்ளார்.
கஞ்சா கடத்தல்
இதனையடுத்து, பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள தாயார், அவரை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தியாவிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு காணாமல் போனவர் கஞ்சா கடத்தலுக்காக இந்தியாவுக்குச் சென்றபோது தவறியுள்ளதாக தெரிவித்ததாகவும் அன்றிலிருந்து அவரது தொலைபேசி செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.




