ராஜபக்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கோரிக்கை
நாட்டை வங்குரோத்து செய்தமைக்காக நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக உலக வங்கியின் விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உலக வங்கியின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணம் கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் இலங்கையின் கடனை அடைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட 7 பேர் காரணம் என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த ஏழு பேரின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam