மின்சார சபை மக்களுக்கானதாக இருக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மின்சார சபை மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது என பெண்கள் வலையமைப்பின் தேசிய மட்ட தமிழ் பிரிவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்துயுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(07.01.2025) நடைபெற்ற மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பாக வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை உறையுளுடன் இன்று மின்சாரமும் ஒன்றாக இணைந்துள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தளவில் மின்சார கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் முதல் சிறு தொழில் முயற்சியாளர்களும் பல நிறுவனங்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளன.
மக்களின் மீது சுமத்தப்பட்ட இழப்புக்கள்
குறிப்பாக யாழ்ப்பாண மக்களில் அதிகமோனோர் அரசின் சலுகைகளை நம்பியே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். வீடுகளை கட்டுவதற்குக் கூட அரசின் உதவித் திட்டங்களை நம்பியே உள்ளனர்.
கொடுக்கப்பட அந்த வீடுகள் கூட இன்னமும் முழுமையாக்க முடியாத நிலையில் கடனாளிகளாக இருக்கின்றனர். இந்நிலையில், எவ்வாறு அவர்கள் மின் இணைப்பை பெறுவது? இதேநேரம், மின்சரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனிடையே, அதிகரித்த மின் கட்டணத்தால் தொழில் துறைகள் குறைகின்றன அல்லது மூடப்படுகின்ற நிலையில் உள்ளன. அதுமட்டுமல்லாது வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் பல வறிய குடும்பங்கள் மின்சார இணைப்பை இழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.
இவ்வாறான போக்கை வறிய மக்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது. இதேவேளை, 2022இற்கு முன்னர் ஓரளவு சாதகமான நிலையில் இருந்த மின் கட்டணம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்போது சடுதியாக மும்மடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது மின்சார சபையின் அனைத்து இழப்புக்களையும் மக்களின் குதுகில் சுமத்தப்பட்டுள்ளது.
மக்களின் நலன்களில் அக்கறை
இதனால் சிறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பக்கள் முன்னெடுத்து வரும் தொழில் துறைகள் பாரிய பின்னடைவை அல்லது இழுத்து மூடும் நிலையை உருவாகின்றது.
இந்நிலையில் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள மின்சார கட்டணங்கள் குறைக்கப்படுவது அவசியமாகும்.
இதேநேரம், மின்சார சபையும் ஒரு அரசாங்க நிறுவனம் தான். இந்த நிறுவனத்துக்கும் மக்கள் மீதும் மக்களின் நலன்களிலும் அக்கறை இருப்பது அவசியம்.
வருடாந்தம் அதிக வருமனத்தை ஈட்டும் நிறுவனமாகவும் ஊழியர்களின் நலன்களுக்காகவும் அல்லாது மக்களின் சுமையை குறைக்கவும் மின்சார சபை தன்னை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். இதற்கு இந்த பொது பயன்பாடு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் சரியான திசையில் இருக்கும் சரியான இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
