பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் (K.Himachal) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் 18 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது.
இன்று காலை முதல் பாவற்குளத்தில் நீர் வரத்தின் அதிகரிப்பு காரணமாக மாலை பாவற்குளத்தின் 2 வான் கதவுகள் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாவற்குளத்தின் கீழ் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற சவாலை எதிர்கொள்வதற்காக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளார்கள்.
அத்துடன் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முகத்தான் குளம் மற்றும் மருதமடு குளம் ஆகியனவும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன.
எனவே அதன் கீழ் உள்ள மக்களும் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 8 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
