இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர் பேராசிரியர் அதியா வாரிஸ் தனது சமீபத்திய அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் குழப்பத்தை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பாதகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் கடன் நெருக்கடியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடன் நெருக்கடியில் தவிக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கு இது சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருப்பதாகவும் ஐ.நா சுயாதீன நிபுணர் பேராசிரியர் அதியா வாரிஸ் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
