மாவீரர்களின் துயிலும் இல்லம் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை

Sri Lankan Tamils Batticaloa Government Of Sri Lanka
By Kumar Nov 25, 2024 08:11 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) இராணுவத்தின் சப்பாத்துக்கால்களின் கீழ் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கில் தற்போது மாவீரர் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றைய தினம் (25) மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு

அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு

அஞ்சலி செலுத்தல் 

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவுகூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது. 

மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடி முன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர்களின் துயிலும் இல்லம் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை | Request Government Regarding Place Of The Heroes

எமது மண்ணுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக, தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாகதன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது. அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. அந்த மாதம் என்பது தமிழர்களினைப்பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது.

அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்றுகொண்டிருக்கின்றோம். இதேபோன்று தாண்டியடி, தரவை, கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.

ஓமந்தையில் மடத்துவிளாங்குளம் உடைப்பு

ஓமந்தையில் மடத்துவிளாங்குளம் உடைப்பு

இலங்கை இராணுவத்தினர் 

அவர்களின் சப்பாத்துக்கால்களுக்கு கீழ் துயிலும் இல்லம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேதனையான விடயம். துட்டகைமுனு கூட எல்லாளன் யுத்ததில் மரணித்த பின்னர் அவனுக்கு சமாதியளித்து மரியாதை அளித்ததாக அறிந்திருக்கின்றோம்.

மாவீரர்களின் துயிலும் இல்லம் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை | Request Government Regarding Place Of The Heroes

முடியாட்சி நடந்த காலம். ஆனால் ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்துகால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக்கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு. முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.

அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை. மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் உள்ளத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு விடிவுக்காக போராடியவர்களை நாங்கள் மலினப்படுத்தாமல் அவர்களின் மகத்துவத்தினை நாங்கள் நெஞ்சில் சுமக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

சீரற்ற காலநிலையின் மத்தியில் முதலை அச்சுறுத்தலுடன் கிளிநொச்சி மக்கள்

சீரற்ற காலநிலையின் மத்தியில் முதலை அச்சுறுத்தலுடன் கிளிநொச்சி மக்கள்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US