மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Colombo Sri Lanka Sri Lanka Government Sri Lanka Presidential Election 2024
By Independent Writer Oct 01, 2024 03:39 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: parthiban shanmuganathan

இலங்கை முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துமாறு புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய பிரியந்த விக்ரமசிங்க, செப்டெம்பர் 26ஆம் திகதி கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தி, கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் புதிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதனின் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதனின் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் 

அதில் “கடந்த காலம் முழுவதும் வடக்கிலும் தெற்கிலும் வெகுஜன புதைகுழிகள் கண்டறியப்பட்டதை நாம் அறிவோம். இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Request Government Investigations Into Mass Graves

இதற்கு இப்போது எங்கும் போராட்டங்கள் நடைபெறுவதையும் நாம் அறிவோம்.

தற்போது தென் மாகாணத்தில் மாத்தளை போன்ற பிரதேசங்களிலும் சூரிய கந்த போன்ற பிரதேசங்களிலும் பாரிய மனித குழிகள் கண்டறியப்பட்டன.

துறைமுக பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்த கட்டிடத்தை அண்மித்து புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாத எலும்புகளும் கிடைத்துள்ளதால் இதை சாதாரண புதைகுழியாக கருத முடியாது.

52 பேரின் எச்சங்கள்

எனவே, இவை தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். 

மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Request Government Investigations Into Mass Graves

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29, 2023 அன்று மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதை குழியிலிருந்து 52 பேரின் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2024 ஜூலை 15ஆம் திகதி மூடப்பட்டது.

மேலும், வடக்கில், பல பாரிய மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டன.

எனவே, இவை குறித்து உரிய விசாரணை நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆகவே அரசாங்கம் உடனடியாக தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான தீவிர கலந்துரையாடலுக்கு மத்தியில் மக்களுக்கு தெளிவான பதில் தேவை என்பதையும் தெளிவாக கூறுகின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பம்

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக விண்ணப்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US