ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்! இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் விடுத்துள்ள அறிக்கை
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் காரணமாக இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிலைமையை விளக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை தூதுவர் நிமல் பண்டார கருத்து வெளியிடுகையில்,
பாதுகாப்புப் படை
“நாங்கள் வசிக்கும் டெல் அவிவின் வடக்கே உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய விமானப்படை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கும்போது சுவர்கள் குலுங்கின. வீடுகளின் கண்ணாடிகள் குலுங்கின.

பல பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
இஸ்ரேலிய வான்வெளி
டெல் அவிவ் சர்வதேச விமான நிலையமும் இஸ்ரேலிய வான்வெளியும் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு பயணித்த மூன்று இலங்கையர்கள் டுபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் டுபாயில் உள்ள துணைத் தூதரகமும், அபுதாபி விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் இலங்கைத் தூதரகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அவர்களுக்கு தற்காலிக தங்குமிட விசாக்கள் மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது விடுமுறையில் உள்ள அனைவரும் தங்கள் கடவுச்சீட்டின் நகலையும், இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசாவின் நகலையும் தூதரகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது அவர்களின் Re-entry விசாவை நீட்டிக்க உதவும். தூதரக அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர், உதவி தேவைப்படுபவர்கள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan