பொலிஸார் மக்களுடன் பொறுமையாக நடக்க வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை
பொதுமக்களுடன் பொறுமையாக நடந்து கொள்ள பொலிஸார் பழகிக் கொள்ள வேண்டுமென்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை மையப்படுத்தி அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மோதல்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்
பொதுமக்களைப் போலவே தற்போதைய நிலையில் பொலிஸாரும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு மன அழுத்தங்களுடன் உள்ளதை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்றுக் கொள்கின்றது.
எனினும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் உத்தியோகத்தர்கள் என்ற வகையில் பொலிஸார் தொடர்ந்தும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றது.

அதே போன்று பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தணித்து அவர்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது சங்கம் அரசாங்கத்தையும் வலியுறுத்திக் கொள்கின்றது என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam