மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இன்று திறந்து வைப்பு
நவீன உபகரணங்கள் மற்றும் பொதியிடல் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தின் 'ரஜலுணு' உப்பு உற்பத்தி இன்று(29.03.2025)ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அயடின் சேர்க்கும் தொழில்நுட்பத்துடன் நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக இன்றில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படவுள்ளது.
கடந்த நாட்களில் நிலவிய உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கைத்தொழில் அமைச்சின் கீழ் உப்பு உற்பத்தியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.
ரஜலுணு
அதன் பிரகாரம் ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுனர் நா. வேதநாயகன், மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

Viral Video: இந்த பை போதுமா? திருமணம் முடிந்த கையோடு ஐயர் பார்த்த வேலை.. கேமராவில் சிக்கிய காட்சி Manithan

நான் என் பெயருக்கு பின் துராடி என பெயர் வைத்ததற்கு அதுதான் காரணம், நான் தமிழச்சி.. சீரியல் நடிகை சரண்யா ஓபன் டாக் Cineulagam
