தேசபந்துக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரப்பிரசாதங்களை நீக்குமாறு கோரிக்கை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வரப்பிரசாதங்களை நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெலிகம, பெலேன பிரதேசத்தில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கை
அதனையடுத்து கடந்த சில நாட்களாக தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளார். அதன் மூலம் அவர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.

இந்நிலையில் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனம், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் ஆறுபேர், விசேட அதிரடிப்படையினர் இருவர், உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே தேசபந்து தென்னகோனை தேடி பொலிஸ் குழுக்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri