புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் கடந்த மாதம் 16.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.

46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அட்டவணைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் ஆகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
எனவே, வெளிநாட்டுப் பணம் அனுப்பிய பணம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்ட வங்கி முறைகள் மூலம் பணம் அனுப்பப்பட்டதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan