லொஹான் ரத்வத்தேவின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் (Lohan Ratwatte) மனைவி ஷஷி பிரபா (Shashi Prabha) ரத்வத்தே எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று (22) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார்
முன்னதாக மிரிஹான, எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த சொகுசு காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையின் போது, ரத்வத்த மற்றும் அவரது மனைவி இருவரும், குறித்த வீட்டில் தனது மாமியார் வசிப்பதாக பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரினால் பல வாரங்களுக்கு முன்னர் இந்த கார் அங்கு கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
