பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் மீண்டும் பாடசாலைகளை மூடக்கூடிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகளில் அதிகமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக பாடசாலைகளில் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri