பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் மீண்டும் பாடசாலைகளை மூடக்கூடிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது பாடசாலைகளில் அதிகமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் சில உப கொத்தணிகள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக பாடசாலைகளில் தொற்று பரவாத வகையில் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களே ஏற்க வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்றுமாறு பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri