மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலும்,நவம்பர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க கோவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Vanniyarachchi) இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பயணிகள் தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது தொடருந்து பருவச்சீட்டுக்களை வைத்திருப்போருக்கு மாத்திரம் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள தரப்பு தகவல்களின் படி பிரதான கடவையில் 50 தொடருந்துகளும், வடக்கு கடவையில் 6 தொடருந்துகளும், கரையோர கடவையில் 64 தொடருந்துகளும், களனிவெளி
கடவையில் 8 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 18 தொடருந்துகளும்
சேவைகளில் ஈடுபடவுள்ளன.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan