மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலும்,நவம்பர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலும் தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க கோவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Vanniyarachchi) இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பயணிகள் தொடருந்து சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சேவைகள் ஆரம்பிக்கப்படும் போது தொடருந்து பருவச்சீட்டுக்களை வைத்திருப்போருக்கு மாத்திரம் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்கள தரப்பு தகவல்களின் படி பிரதான கடவையில் 50 தொடருந்துகளும், வடக்கு கடவையில் 6 தொடருந்துகளும், கரையோர கடவையில் 64 தொடருந்துகளும், களனிவெளி
கடவையில் 8 தொடருந்துகளும், புத்தளம் மார்க்கத்தில் 18 தொடருந்துகளும்
சேவைகளில் ஈடுபடவுள்ளன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam