வெசாக் தினத்தை முன்னிட்டு 3 நினைவு முத்திரைகள் வெளியீடு
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இன்று வழங்கப்பட்டது.
இந்த வருட தேசிய வெசாக் தினத்தை வடக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்து.
அதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் ஓவியங்கள் இந்த ஆண்டு தேசிய வெசாக் தின நினைவு முத்திரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, யாழ்ப்பாணம் கதுறுகொட விகாரை மற்றும் வவுனியா கமடுகந்த தலதா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு முத்திரை வடிவமைப்பாளர் பாலித குணசிங்க இந்த நினைவு முத்திரைகளை வடிவமைத்துள்ளார்.
10 ரூபா , 15 ரூபா மற்றும் 45 ரூபா ஆகிய மதிப்பிலான மூன்று முத்திரைகள் இதன்போது வெளியிடப்பட்டன.




பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
