அவுஸ்திரேலிய முகாம்களில் 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட மூத்த அகதி விடுதலை
அவுஸ்திரேலிய முகாம்களில் 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட 80 வயதுடைய புகலிடக்கோரிக்கையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரொஹின்யா அகதியான Mohammad Ayub, கடந்த 2013ம் திகதி தனது இரு மகள்கள், மகன் மற்றும் மனைவியுடன் படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார்.
இதையடுத்து நவுறு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட இக்குடும்பம் 2019ம் ஆண்டு மருத்துவ தேவைகள் கருதி அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு விடுதியில் தடுத்துவைக்கப்பட்டது.
இதன் பின்னர் Mohammad Ayub-இன் மகள்களும் மனைவியும் சிட்னிக்கு அனுப்பப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்ட அதேநேரம் Mohammad Ayub-உம் மகன் Sharif Ayub-உம் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
பிரிஸ்பனில் சுமார் இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 8 ஆண்டு தடுப்புமுகாம் வாழ்க்கைக்குப்பின்னர் தற்போது இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளில் வயதில் மிகவும் மூத்தவராக 80 வயதுடைய Mohammad Ayub, இவரே இருக்கலாம் என நம்பப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
