ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு

United Nations Sri Lankan Tamils Tamils Geneva
By Independent Writer Sep 26, 2025 07:11 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இலங்கையைப் பற்றிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மடங்கற்திங்கள் இன்று(26) ஒரு முக்கியமான ஆய்வாக நடைபெற்றது.

அது வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்துக் காக்கும் பன்னாட்டு உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. குழுவின் இலங்கை தொடர்பாக ஆய்வாகும்.

இலங்கை 2016 இல் இந்த உடன்படிக்கையில் இணைந்தது. ஆனால் 2018 இல் அளிக்க வேண்டிய அரசின் அறிக்கை 2023 இல் மட்டுமே கொடுக்கப்பட்டது.

மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மன்னாரில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

விசாரணை அறிக்கைகள் 

 காணாமல் போனோரின் குடும்பங்களோடு கலந்து விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையை சிறிலங்கா அரசு இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு விசாரணைக் குழுமங்கள் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பெற்றும் தெளிவான முடிவுகள் எதுவும் இன்றுவரை எட்டப்படவில்லை.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

30 இற்கும் மேற்பட்ட மாந்தர் பண்பாட்டிற்கே புறம்பான பெரும் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்னேறவில்லை.ஆட்சிகள், அரசுகள் மாறினாலும் காணாமல் போனோரின் குடும்பங்கள் தொடர்ந்து மிரட்டல், துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

இனம் கடந்து இலங்கையின் மூவின மக்களும் காணமல் ஆக்கப்பட்ட பேரிடரை எதிர்கொண்ட மக்களாக தமது பெருந்துன்பத்துடன் நீதிவேண்டி அறவழியில் போராடுகின்றார்கள்.

சிறிலங்காவின் அரச சட்டத்தரணி பொதுச்செயலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர் முறையிட்ட வழக்குகளை முன்னெடுக்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை நீண்டகாலம் தொடர்வதாகவே தமிழ்மக்கள் இச்செயலை நோக்குகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெறும் பன்னாட்டு மன்றத்தின் (ஐ.நா) ஆய்வு, இலங்கையின் புதிய அரசுக்கு பழைய மறுப்பு உள்ளப்போக்கிலிருந்து விலகி, உண்மையை ஒப்புக்கொண்டு மாந்தர் பேரன்பு (மனிதநேய) அடிப்படையில் இடர்களுக்கு அறத்துடன் நீதி வழங்க வாய்ப்பளிக்கிறது.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் 

இதனை புதிய சிறிலங்கா அரசு பயன்படுத்துமான என்பதும் ஐயமே?... ஒவ்வொரு காணாமற்போனவரும் ஒருவரின் மகன், மகள், கணவர் அல்லது மனைவியென நினைவூட்டும் வகையில், குடும்பங்களின் துயரங்கள் மீண்டும் ஜெனீவா மேடையில் வெளிப்படும் பொருட்டு இலங்கையில் இருந்து 7 அன்னையர்கள் ஜெனீவாவிற்கு வருகை அளித்துள்ளனர்.

இவர்களில் சிங்கள இனத்து அன்னையரும் உள்ளனர். ஈழத்திலும் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இன்றுவரை தேடும் அறப்போராட்ட அன்னையர்கள் தமது சான்றுகளையும் வேண்டுகையினையும் உலகப்பொதுமன்றில் இக்காலத்தில் முன்வைக்கவுள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

இந்த அன்னையர்கள் இலங்கையில் இடம்பெற்ற பெரும்போர் காலத்திலும் மற்றும் அதற்கு பின்னரான காலத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களே.

2009 மே இறுதிக் கட்டப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுவரை ஓய்வின்றி நடந்து வருகின்றது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் தமது உறவுகளைத் தேடும் அறப்போராட்ட அன்னையர் ஜெனீவா ஐ.நா மன்றத்திற்கு வருகை அளித்திருக்கும் வேளை கடந்த வியாழக்கிழமை (25) செந்தமிழ் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாடு நோற்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்திற்கு நவராத்திரி விழாக் காலத்தில் வருகை அளித்தனர்.

சைவநெறிக்கூடம் 

சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் அன்னையற்கு மதிப்பளித்து இறைதிரு அருட்பொருட்களை வழங்கினர்.

சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொடர்ந்து பேசுகையில் „அன்னையர்களது போராட்டம், இனத்தைக் கடந்து அறம் சார்ந்தது, இவர்களின் இழப்புக்களை எவராலும் இட்டு நிரப்ப முடியாது.

ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு | Relatives Those Were Forced To Flee Sl In Geneva

இழப்புக்களுக்கு நிகர்மை ஆற்றமுடியாது. அதேவேளை உறவுகளை தேடுபவர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.

அன்னையர்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டத்திற்கு சைவநெறிக்கூடம் என்றும் இசைவுடன் பக்கவலிமை சேர்க்கும் என்று உறுதி அளித்தார்.

சமயரீதியான ஆற்றுப்படுத்தல் செயலினையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் ஆற்றினர். அன்னையர்களின் செயற்பாடுகளுக்கு துணைநிற்கும் திருவளர். லாவண்யா சின்னத்துரை மற்றும் திருவளர் துசாந்திக்கும் சைவநெறிக்கூடத்தின் சார்பில் நன்றி பகிரப்பட்டது.

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

திஸ்ஸமஹாராமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி


1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US