சிறீதரன் மீதான குற்றச்சாட்டு : மூவர் கொண்ட குழு நியமனம்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுசெயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று(17.05.2026) இடம்பெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாயகம் கோரிய உரிமைப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தமிழினத்தை நினைந்துருகுகிறது முள்ளிவாய்க்கால் - LIVE
நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள்ளே எடுக்கப்பட்ட தீர்மானமாக இருந்தாலும் அத்தீர்மானம் உரிய முறையில் அறிவிக்கப்படாவிட்டால் அது திரிபுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
எனவே அதனை உத்தியோகபூர்வமாக கட்சி எடுத்த தீர்மானத்தை அறிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் அமைப்பு பேரவையில் அரசாங்கத்திற்கு சாதகமாக செயற்ப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அது தொடர்பாக அவருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். எனவே அந்த பதவியிலிருந்து கட்சியையும் சங்கடப்படுத்தாமல், அவரும் சங்கடப்படாமல் ராஜினாமா செய்யுமாறு கட்சியின் அரசியல் குழு கடிதம் அனுப்பியிருந்தது.
அதில் அவர் இணங்காத காரணத்தினால் நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து அவர் இறக்கப்பட்டார். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். இன்றைய கூட்டத்திலும் அந்த விடயம் பேசப்பட்டு இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கட்சியில்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் அதற்கு இணங்கி இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
அந்தவகையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கட்சியில் பதவி நிலையில் உள்ள மூவர் அதாவது தலைவர், நிர்வாக செயலாளர், பொருளாளர் ஆகியோர் இந்த விடயங்கள் உண்மையாக நடந்தனவா இல்லையா என்பது தொடர்பாக சிறீதரனுடனும் கலந்துபேசி ஆராய்ந்து, மத்திய செயற்குழுவிற்கு அறிவிப்பார்கள்.

ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக பேசப்பட்டது. ஆனால் ஒரு இணக்கப்பாடாக இப்படி ஒரு பொறிமுறை ஏற்ப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுகட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், செயலாளர் எம்.எ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், து.ரவிகரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், இ.சிறிநாத் உட்பட கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை தொடர்பாகவும், புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam