அரிசியை நன்கொடையாக வழங்குமாறு சீனாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
அரிசியை நன்கொடையாக வழங்குமாறு சீனாவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு சீனா ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை சீனா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரண அண்மையில் கூறியிருந்தார்.
எனினும் ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை நன்கொடையாக வழங்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இலங்கைக்கு பாரியளவு தொகை அரிசி நன்கொடையாக கிடைக்கப் பெறாது என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த ஆங்கில ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய அரிசி இலங்கைக்கு கிடைக்கப் பெறும் எனவும் அதில் மாற்றமில்லை எனவும் வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் மகேஸ் விக்ரம தெரிவித்துள்ளார்.
என்ன வகையான அரிசி என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016ம் ஆண்டு புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் தனி நபர் ஒருவர் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 104.5 கிலோ கிராம் எடையுடைய அரிசியை நுகர்கின்றார்.
இதன்படி, நாட்டின் மொத்த அரிசி தேவை ஆண்டு ஒன்றுக்கு 2.1 மில்லியன் மெற்றிக் தொன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மொத்த வருடாந்த அரிசித் தேவையில் அரைவாசிப் பகுதி அதாவது ஒரு மில்லியன் மெற்றிக் தொன் எடையுடைய அரிசியை சீனா வழங்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்குகும் இடையில் இறப்பர் – அரிசி உடன்டிக்கை கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதினை முன்னிட்டு இந்த அரிசி நன்கொடை வழங்கப்படுவதாகவும் மார்ச் மாதமளவில் அரிசி தொகை நாட்டை வந்தடையும் எனவும் டொக்டர் ரமேஸ் பத்திரன கூறியிருந்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 16 நிமிடங்கள் முன்

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

ரஷ்யாவுக்கு சவால் விடும் வகையில்.. வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் புதிய ஏவுகணை! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022