தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகள் அழிப்பு! நிராகரிக்கப்பட்ட பி்ணை மனு
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவு அழிக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட எபிக் லங்கா டெக்னோலொஜிஸின் மென்பொருள் பொறியாளரால் முன்வைக்கப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தற்போதைய விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்ற காரணத்தினால், பிணை வழங்க முடியாது என்று கூறினார்.
அதன்படி, சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, சந்தேகநபர் ஒரு சிறப்பு கட்டளையைப் பயன்படுத்தி தரவுத்தளத்திலிருந்து தொடர்புடைய தரவை அழித்ததாக வெளிப்படுத்தினார்.
கட்டளை மூலத்தின் ஐபி முகவரியும் மற்றும் மென்பொருள் பொறியாளரின் கணினியின் ஐபி முகவரியும் ஒன்றுதான் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.